Saturday, February 9

கல்முனையில் மூவருக்கு மரண தண்டனை



கொலைக்காக மற்றுமொருவரை கொலைச்செய்தார்கள் என்று குற்ற    ஞ்சாட்டப்பட்ட மூவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கல்முனை நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அம்பாறை இறக்காமம்  பிரதேசத்தில் தமது உறவினர் ஒருவரை கொலை செய்தவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியினால் வெட்டியும் கொலைசெய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கு கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இறக்காமம் நான்காம் பிரிவைச் சேர்ந்த எம்..நூர்தீன் அல்லது ரசாக் என்றழைக்கப்படுபவரை கடந்த 2002 ஆம் ஆண்டு அதேபிரதேசத்தில் வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

Friday, February 8

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ds



தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னிட்டு கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் இன்று காலை (07-02-2013) பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் சிரமதானப் பணி ஒன்று (களை நாசினி விசுறுதல்) நடைபெற்றது.
சிரமதானப் பணியில் பங்கு பற்றிய    பட்டதாரி பயிலுனர்கள், உத்தியோகத்தர்களையும் படங்களில் காணலாம்.
download ds DSCF5119

Tuesday, February 5

சாய்ந்தமருதில் பௌத்த சமூகத்தின் மத்தியில் முஸ்லீம்களின் வாழ்க்கை முறைபற்றி தெளிவுபடுத்த நடவடிக்கை

இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையினையும் நடவடிக்கைகளையும் பிழையாக விளங்கியுள்ள மாற்று சமூகத்திற்கு இஸ்லாமிய வாழ்க்கை முறைபற்றி நாடு தளுவிய ரீதியில் விளக்கமளிக்கும் வகையில் ஆராயும் கூட்டமொன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ரெஸ்டோரன்டில், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஸ்ஷேஹ் என்.எம்.அப்துல் முஜீப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஸ்ஷேஹ் ஏ.எம்.ஹிதாயத்துல்லாஹ் தலைமையிலான உலமாக்களும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச உலமாக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கல்முனை பிராந்திய கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம்!

HUMANRIGHTS.1jpg

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய பணிமனை கல்முனைப் பிராந்தியத்திலுள்ள கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும்  மதியுரைஞர்கள் குழுக் கூட்டம் கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெற்றது.
அங்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் விளக்கமளிப்பதையும் மனித உரிமைகள் இணைப்பாளர் எம்.எம்.சறூக் ஆகியோர் உரையாற்றுவதையும் குழுவினரையும் படங்களில் காணலாம்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியயல்பீடத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியயல்பீடத்தின் கட்டிடத்தொகுதியையும், இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடத்தினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (சற்றுமுன்) திறந்துவைத்தார்.

விசேட ஹெலிகொப்டரில் ஒலுவில் அல்-ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக
உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர் குலாம் றசீட் ஆகியார் வரவேற்றனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக எம்.எச். நவாஸ் நியமனம்



கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக முஹம்மட் ஹனீபா நவாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


அதிபர் தரம் 1ஐ வகிக்கும் கல்வி முதுமாணிப் பட்டதாரியான இவர் மூதூரைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வதிவிடமாகவும் கொண்டவராவார்.


1975ஆம் ஆண்டு மூதூர் பெரிய பாலம் ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில்  கணித விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்;று  தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்த இவர், கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் உதவி அதிபராகவும், அல்பஹ்ரியா மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்ட இவர்
நேற்றே தனது கடமையினை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பாக பல மாதங்களாக இடம்பெற்ற இழுபறி நிலைக்கு மத்தியில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

சாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வுகள்


DSCF3860
இலங்கையின் 65வது சுதந்திர தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திர நிகழ்வுகள் நடைபெற்றன.மேற்படி சுதந்திர தின நிகழ்வுகள் சாய்ந்தமருதிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.