மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான பகுதிக்கு ரயில் சேவையை விஸ்தரிப்புச் செய்யுமாறும் கல்முனையில் இயங்கி வந்த மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறும் தேசிய முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதியைக் கேட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுஜேர்னல் பிளேசில் நடைபெற்ற கவுன்சிலின் அரசியல் பீடக் கூட்டத்திலே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அவை தொடர்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன