Showing posts with label சாய்ந்தமருது செய்திகள். Show all posts
Showing posts with label சாய்ந்தமருது செய்திகள். Show all posts
Friday, February 16
இன்றைய பேசுபொருளாகியுள ்ள விடையம்: பிரதமர் ரணிலை ஜனாதிபதி மைத்ரீ பதவி நீக்கலாமா?
19ம் திருத்தம் கொண்டுவரமுன் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. 19 இன் பின் இல்லாமல் செய்யப்பட்டது. 19ம் திருத்தத்துக்கு முன் சரத்து 47 இல் குறிப்பிடப்பட்ட ுள்ள மூன்று நிபத்தனைகளில், 1ஆவது நிபந்தனையான, ஜனாதிபதியால் பிரதமர் நீக்கப்படலாம் என்ற நிபத்தனை நீக்கப்பட்டு, 19ம் திருத்தத்தின் பின் சரத்து 46(2) இல் இரண்டு நிபத்தனைகள் மட்டுமே காணப்படுகிறது. Snapshots of both articles are attached.
Friday, July 19
சாய்ந்தமருது பீச் பாக், வாசிகசாலை சுற்றுமதில், மீனவர் மண்டபம் என்பவற்றை உடைக்குமாறு CCD உத்தரவு!

சாய்ந்தமருதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவர் வாசிகசாலை மற்றும் பீச் பாக் என்பவற்றின் சுற்று மதில்களையும் மீனவர் ஓய்வு மண்டபம் உள்ளிட்ட மூன்று கட்டிடங்களையும் ஏழு நாட்களுக்குள் உடைத்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது மீனவர்
வாசிகசாலை அண்மையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரையில்
அமைக்கப்பட்டு, இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பீச் பாக்கின் சுற்றுமதில்
நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
Tuesday, July 2
எம்.சி.எம்.சி.ரிழா (J.P) அவர்கள் "சாமஸ்ரீ தேசமான்ய" விருது வழங்கி கௌரவிப்பு
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தராகவும் நீரிழிவு பிரிவின் பொறுப்பாளராகவும் கடமை புரியும் சாய்ந்தமருதை சேர்ந்த எம்.சி.எம்.சி. ரிழா அவர்கள், அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் 2013 க்கான "சாமஸ்ரீ தேசமான்ய" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவ்விருதானது பிராந்தியத்தில் சமூக, மத கலாச்சார சமூக இணக்கப்பாடு போன்றவற்றில் அளப்பெரிய பங்காற்றுபவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்காக வழங்கி கௌரவிக்கப்படுவர். இவ்விழா அண்மையில் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவானாக பல வருடமாக சேவையாற்றி வருகிறார்.இவர் திறந்த பல்கலைக்கழகத்தில் அண்மையில் இவரது தாதி பட்டப்படிப்பை (BSc Degree in Nursing) பூர்த்தி செய்து பட்டமும் பெற்றுள்ளார்.
Sunday, June 30
கல்முனை சாஹிறா கல்லூரியில் வெற்றிகரமாக இடம்பெற்ற ZESDO அமைப்பின் இரத்ததான நிகழ்வு
செஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர்
காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த
வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசிய
பாடசாலையில் இன்று (30-06-2013) நடைபெற்றது. ZESDO அமைப்பின் உறுப்பினர்களான அஷ்ரஃப் ஞாபகார்த்த
வைத்தியசாலையில் பணி புரியும் MCMC. ரிழா (Nurse), SHM. ஜர்மின் (MLT) ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தனர்.
செஸ்டோ அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான
ரீ.எம்.எஸ். வெலிகடராச்சி, என்.எம்.மெடகொடகெட்டி மற்றும் அஷ்ரஃப்
ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர்
எஸ்.எச்.ஹனீம் ஆகியோரின் வழி காட்டலில் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
நாம் அரசை நம்பியிருக்கவில்லை சொந்த நிதியிலேயே இயங்குகிறோம் : கல்முனை மேயர்

அரச நிதி எமக்கு முற்றாக கிடைப்பதில்லை
என்று கூறமுடியாது ஆனாலும் அதை நம்பி எமது மாநகர சபை இயங்கவில்லை, எமது
வருமானத்தை வைத்தே நாம் எமது நகரத் தேவைகளை நிறைவேற்றுகிறோம் என்று
தெரிவித்துள்ளார் கல்முனை மேயர் ஷிராஸ் மீராசாஹிப்.
நாம் கட்சித் தலைமைக்கு முழுமையாகக்
கட்டுப்பட்டவர்கள், எல்லா பிரச்சனைகளையும் கட்சித்தலைமை தீர்க்க வேண்டிய
அவசியமும் இல்லை என கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் கூறிய அவர்,
எமக்கிருக்கும் நெருக்குதல்களையும், பழிவாங்கல்களையும் மீறி நகரசபைக்குக்
கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே நாம் சிறப்பாக இயங்குகிறோம் எனத்
தெரிவித்தார்.
13ம் திருத்தச்சட்டத்தினை நிராகரிப்பது
எமக்கிருக்கும் உரிமைகளை பறித்தெடுப்பது என்றும் சுட்டிக்காட்டிய அவர்
முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் தேவைகள் அறிந்து இயங்கும் கட்சி
எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வாராந்த
முஸ்லிம்குரல் ஒலிபரப்பின் மக்கள் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Saturday, June 29
சாய்ந்தமருது வைத்தியசாலை சத்திர சிகிச்சை உபகரணங்கள் கபளீகரம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!
சாய்ந்தமருது
மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்கைப் பிரிவு உபகரணங்களை கபளீகரமாக
வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறித்து முறைப்படி முறையிட்டால் அது
தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்
எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நடும்
வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஆசாத் சாலியின் மக்களுடனான சந்திப்பு
தேசிய ஐக்கிய முன்னனியின் அம்பாறை மாவட்ட
கிளை ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், கலாநிதி. விக்ரமபாகு கருணாரத்ன
(தலைவர் - நவ சம சமாஜ கட்சி), சரத் மனோமேந்திரா
(தலைவர் நவ சிஹல உறுமய கட்சி), ஹேமசிறி ஹப்பு ஆராச்சி (தலைவர் - எக்சத்
ஜனதா கட்சி) ஆகியோருடன் கல்முனை மாநகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு
உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Friday, June 28
சாய்ந்தமருது பிராந்திய சிவில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
(எம்.வை.அமீர்)
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேகவர் பிரிவுகளில்
இருந்து பிரிவுக்கு ஐவர் வீதம் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை
ஒன்றிணைத்து விழிப்பூட்டும் நிகழ்வு ஒன்று 27-06-2013 மாலை 7 மணியளவில்
சாய்ந்தமருது ‘ரியாளுள் ஜன்னா’ வித்தியாலத்தில் அந்தப்பாடசாலையின் அதிபர்
தலைமயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய பிரதம போலீஸ்
பொறுப்பதிகாரி AWA கfப்பாரும் விசேட அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய
பொறுப்பதிகாரி ALA வாஹீத் மற்றும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் AA
வசீர் மற்றும் உலமாக்களும் போலீசாரும் சிவில் பாதுகாப்பு
உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய பிரதம போலீஸ் பொறுப்பதிகாரி,
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் கடைப்பிடிக்க
வேண்டிய நடைமுறைகள் சம்மந்தமாகவும் விரிவான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையாற்றும் போது சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் இணைப்பு பாலமாக திகழ வேண்டும் என்றும்
கல்முனை போலீஸ் நிலைய எல்லைக்குள் இடம்பெறும் சில சீர் கேடுகளையும்
இப்படியான சீர் கேடுகள் பிராந்திய மக்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும்
என்றும் இங்கு இடம்பெறும் தறுகளை திருத்திக் கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு
உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்கள் செறிந்து
வாழும் இது போன்ற பிரதேசத்தில் இடம்பெறும் சீர் கேடுகள் மாற்றுச்சமுகத்தின்
மத்தியில் மிகுந்து பேசப்படும் என்றும் உதாரணத்துக்கு தலைக்கவசம் இல்லாது
வாகனம் செலுத்த சிலர் கோருவதாகவும் இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ள
விடையத்தை தன்னிடம் அனுமதி கோரி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள தற்கொலைக்கு
தன்னிடம் அனுமதி கோருவதாகவும் தெரிவித்தார்.
கல்முனை மேயர் லண்டன் விஜயம் - இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகர மேயருடன் சந்திப்பு
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரத்தியேக விஜயம் ஒன்றை
மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2013) இலண்டன் பயணமானார். இதன் போது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின் தலைவர் எம்.எஸ்.ஹலீமின்
ஏற்பாட்டில் நேற்று இலண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங்
மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள்,
சுனாமியின் பின்னரான கல்முனை, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் சுற்றுச்சூழல்
என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு ரெட்பிரிட்ஜ் நகர சபையின் நடவடிக்கைகள், பயன்படுத்துகின்ற
தொழில்நுட்ப யுக்திகள், மக்கள் தொடர்பாடல் முறை, நிர்வாக முகாமைத்துவ முறை,
முறைப்பாட்டு முகாமைத்துவ முறை மற்றும் மாநகர சபைக்கான நிதியீட்டல்
முறைமைகள் தொடர்பாக ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது.
இவை எதிர்கால கல்முனை மாநகர சபை நடவடிக்கைக்கு பெரிதும் உதவும் என
எதிர்பார்க்கப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் தெரிவித்தார். அத்துடன்
ரெட்பிரிட்ஜ் மாநகர முதல்வர் கல்முனை மாநகர சபைக்கு வருகை தருவதற்கான
அழைப்பினையும் சிராஸ் மீராசாஹிப் விடுத்தார்.
இதன் போது கல்முனை மாநகரசபையின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலண்டன் கிளையின்
உறுப்பினர்களான சியாத் ஏ. கபூர், எம்.ஜெசீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Thursday, June 27
சாய்ந்தமருதில் "பல்லின சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு" கலந்துரையாடல்
"பல்லின சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு" என்ற தலைப்பில் சிறப்புரையும் கலந்துரையாடலும் எதிர்வரும் 29-06-2013 சனிக்கிழமை "சமூக ஆய்விற்கான நிலையம் சாய்ந்தமருது " இனால் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் அஷ் ஷேய்க் எம். ஏ.எம். மன்சூர் (நழீமி) (பணிப்பாளர், மிஷ்காத், இஸ்லாமிய ஆய்வு நிறுவனம்) சிறப்புரை ஆற்ற உள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் சமகால நிலைமைகளையும், சவால்களையும் கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலில் எமது பிரதேசத்தின் பல் துறை சார் நிபுணத்துவம் கொண்டவர்களும் புத்தி ஜீவிகளும் பங்கேற்கவுள்ளனர். எனவே இதில் அனைவரையும் பங்கேற்குமாறு "சமூக ஆய்விற்கான நிலையம், சாய்ந்தமருது " வேண்டிக்கொள்கிறது.
காலம்: 29-06-2013 (சனிக்கிழமை) பி.ப. 4.00 மணிக்கு
சிறப்புரை: அஷ் ஷேய்க் எம். ஏ.எம். மன்சூர் (நழீமி) (பணிப்பாளர், மிஷ்காத், இஸ்லாமிய ஆய்வு நிறுவனம்)
ஏற்பாடு: சமூக ஆய்விற்கான நிலையம், சாய்ந்தமருது
கல்முனை சாஹிறாவில் ZESDO அமைப்பினால் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30-06-2013) கல்முனை சாஹிறா கல்லூரியில் Zahirians' Education and Social Development Organization (ZESDO) அமைப்பினால் மாபெரும் பொது இரத்த தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை இடம்பெறும்.
இந்த இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய விரும்புவோர், Mr. S.H.M. Jarmin ( 0713217194, 0772995986) , Mr. M.C.M.C. Rila (0779944171) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் முப்பதாம் திகதி காலை கல்முனை சாஹிறா கல்லூரிக்கு சமூகமளிக்குமாறும் வேண்டப்படுகிறார்கள்.
அண்மைக்காலமாக ZESDO அமைப்பு கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் பல்வேறுபட்ட கல்வி, சமூகம், அபிவிருத்தி சார்ந்த விடையங்களில் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருவது குறிப்பிட தக்கது.
Wednesday, June 26
கல்முனை பிரதேச வர்த்தக பிரமுகர்களுக்கு வரி தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு
உள்நாட்டு இறைவரி திணைக்கள தகவல் கிளை கல்முனை வர்த்தகர் சம்மேளனத்தின்
அனுசரணையில் ஒழுங்கு செய்திருந்த கல்முனை பிரதேச வர்த்தக பிரமுகர்களுக்கு
வருமான வரி , நாட்டை கட்டியெழுப்புதல் வரி மற்றும் பெறுமதிசேர் வரி
சம்பந்தமாக தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று இன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ்
ரெஸ்டோரன்டில் இடம்பெற்றது.
உள்நாட்டு இறைவரி திணைக்கள தகவல் பிரிவு பிரதி ஆணையாளர் ஜீ.எல்.ஜீ.விமலரெட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்
கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அதிகளவிலான வர்த்தக பிரமுகர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
Tuesday, June 25
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்தின நிகழ்வு (படங்கள்)
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் க.பொ.த உ.த- 2013 மாணவர்தின நிகழ்வு
இன்று (25) பாடசாலையின் எம்.எஸ். காரியப்பர் கூட்ட மண்டபத்தில்
வர்த்தககலைப்பிரிவு பகுதித்தலைவர் மௌலவி யு.எல்.எஸ். ஹமீட் தலைமையில்
இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.
ஜெமீல் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர்
யு.எல்.எம். ஹாஸீம் மற்றும் பாடசாலை அதிபர் ஏ. ஆதம்பாவா, பாடசாலையின் பிரதி
அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க
உறுப்பினர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் மலர் வெளியீடு இடம்பெற்றதோடு, நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Friday, June 21
சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்திற்கு ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்டினார்
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால்
ஒளிரும் கல்முனை “ திதுலன ” 51 வேலைத்திட்டத்தின் கீழ் 2வது வேலையைான
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திற்கான
புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா இன்று காலை (21) கல்லுாரி
அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான
ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.
மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல். தவம்,
மற்றும் கல்முனை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் கட்சியின் அங்கத்துவத்திற்கான
தேசிய பணிப்பாளர் ஏ.சீ. யஹ்யாகான்,ஆகியோருடன், கல்முனை மாநகர சபை
உறுப்பினர்கள் கட்சிப்போராளிகள், பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள்எனப்பலரும்
கலந்துகொண்டனர். இன்று பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன்,
பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் தொடர்ந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
'ஒளிரும் கல்முனை' - சாய்ந்தமருதுவில் மஸ்ஜிதுல் குபா எனும் பள்ளிவாயல்
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால்
ஒளிரும் கல்முனை “ திதுலன ” 51 வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வேலையைான
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மஸ்ஜிதுல் குபா எனும் பள்ளிவாயல்
முதல்கட்டமாக சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் இன்று ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஸீர் தலைமையில் இடமபெற்ற இந்நிகழ்வில்
எச்எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.
ஜெமீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பொருளாளர் ஏ.சீ.
யஹியாகான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை மாநகர சபை உறுப்பினர்
எம்.ஐ.எம். பிர்தௌஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பாயிஸ்,
சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா
உட்பட பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
Friday, June 7
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் ஆரம்பகால வரலாறு
முஸ்லிம்கள் ஓரிடத்தில் குடியேறி அங்கு வாழத் தொடங்கியதும் அவர்கள்
வசிப்பதற்குரிய வீடுகள் அமைக்கும் போது பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்துக்
கொள்வது இஸ்லாமிய வரலாறாகும்.
சாய்ந்தமருதில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய காலத்தில் ஊரின் தென் பகுதி
காடாக இருந்துள்ளது. அக்காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டியெடுத்து
இப்பொழுது பெரிய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் மரங்களையும்
இலுக்குகளையும் கிடுகுகளையும் கொண்டு சிறிய பள்ளிவாசலொன்றை தற்காலிகமாக
அமைத்துக் கொண்டார்கள். இது முன்னர் முகைதீன் பள்ளிவாசல் என
அழைக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டில் தஃவாப் பணிக்காக பக்தாத் நகரில் இருந்து முகைதீன்
அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் சிஷ்யர் இலங்கை வந்ததாகவும் அவர் அக்கால
சிங்கள அரசனின் (கஜபாகு) புதல்வனது தீராத நோயைக் குணப்படுத்தியதினால்
அவருக்கு அந்த அரசன் கரைவாகுவை பரிசாகக் கொடுத்து அங்கு காணப்பட்ட
பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட வேண்டும் என
கட்டளையிட்டதாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர்.
இப்பள்ளிவாசல் 1691ஆம் ஆண்டளவில் மட்டக்களப்புக் கச்சேரியில் அடை
அறவீட்டுக் கணக்கராக கடமைபுரிந்த சதக்குலெவ்வை என்பவரினால்
பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. 1870ம் ஆண்டில் பிரதம மரைக்காயர்
மீராலெவ்வைப் போடி வன்னியனார் காலத்தில் சுமார் 1000 பேர் தொழக்கூடிய
இடவசதியுள்ள பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது. 1961ம் ஆண்டில் பிரதம மரைக்காயர்
ஜனாப் மு.அ. அப்துல் கபூர் காலத்தில் பள்ளிவாசலின் முன்பக்கமாக
மண்டபமொன்று அமைத்து முகப்பு வேலைகளும் செய்யப்பட்டு இப்பள்ளிவாசல்
புதுப்பொலிவுடன் விழங்கியது. தற்போதைய பள்ளிவாசல் கட்டடம் சுமார் 5000 பேர்
தொழக்கூடிய இடவசதி கொண்ட நவீன இருமாடிக் கட்டடமாக கட்டுவதற்கு 1985ம்
ஆண்டு பிரதம மரைக்காயர் அல்ஹாஜ் M.I.M. மீராலெவ்வை காலத்தில் ஆரம்பித்து
வைக்கப்பட்டு 2003ம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் நாளை 9 மணிநேர மின்வெட்டு
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை 9. மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, இஸ்லாமாபாத்
பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவனை, மணல்சேனை, நற்பிடடிமுனை
துரைவந்தியமேடு மற்றும் மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் நாளை காலை 8.00
மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
அவசர திருத்த வேலை காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
கொம் டெக் கல்வி நிறுவனத்தின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு
கல்விப்பொதுத்தராதர
சாதாரண தர பரீட்சை எழுதியதன் பின்னர் உயர் தரத்துக்கு செல்வதற்கு இடைப்பட்ட
காலப்பகுதியில் கொம் டெக் கல்வி நிறுவனத்தில் அமெரிக்க சக்காத் நிறுவனத்தின் புலமை
பரிசு திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் போன்ற பாடங்களை கற்று வெளியேறிய
மாணவ மாணவிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு ஒன்று (2013.06.06) மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
அறிக்கை விடுவதை முபாறக் அப்துல் மஜீட் தவிர்த்துக் கொள்வது சிறந்தது - கல்முனை மேயர்
தனது தனிப்பட்ட குடும்ப அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம் மக்கள் கட்சியின்
தலைவர் எனக் கூறிக்கொண்டு முன்னும் தெரியாமல் பின்னும் தெரியாமல்
பத்திரிகையில் அறிக்கை விடுவதை முபாறக் அப்துல் மஜீட் தவிர்த்துக் கொள்வது
சிறந்த ஒரு நடவடிக்கையாக அமையும் எனக் கருதுகின்றேன். எனத் தெரிவித்து
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அறிக்கை ஒன்றினை
விடுத்துள்ளார்.
மக்கள் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் நேற்று பத்திரிகை ஒன்றிற்கு
விடுத்திருந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையிலே முதல்வர் சிராஸ்
இவ்அறிக்கையினை விடுத்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)




























