Tuesday, July 2

எம்.சி.எம்.சி.ரிழா (J.P) அவர்கள் "சாமஸ்ரீ தேசமான்ய" விருது வழங்கி கௌரவிப்பு








கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தராகவும் நீரிழிவு பிரிவின் பொறுப்பாளராகவும்  கடமை புரியும் சாய்ந்தமருதை சேர்ந்த எம்.சி.எம்.சி. ரிழா  அவர்கள், அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் 2013 க்கான "சாமஸ்ரீ தேசமான்ய" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவ்விருதானது பிராந்தியத்தில் சமூக, மத கலாச்சார சமூக இணக்கப்பாடு போன்றவற்றில் அளப்பெரிய பங்காற்றுபவர்கள்  இனங்காணப்பட்டு, அவர்களுக்காக வழங்கி கௌரவிக்கப்படுவர். இவ்விழா அண்மையில் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவானாக பல வருடமாக சேவையாற்றி வருகிறார்.இவர் திறந்த பல்கலைக்கழகத்தில் அண்மையில் இவரது தாதி பட்டப்படிப்பை  (BSc Degree in Nursing) பூர்த்தி செய்து பட்டமும் பெற்றுள்ளார்.

இவர் அண்மைக்காலமாக கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில், அளப்பெரிய சேவைகளை ஆற்றிவரும் ZESDO (Zahirians' Education and Social Development Organization) அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 






1 comment: