Thursday, February 28

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி நிர்மாணப் பணியில் தொடர்கிறது மர்மம்?


கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியின் நிர்மாண பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வின்போது திரைநீக்கம் செய்யப்பட்ட வீதியமைப்பு நினைவுப்படிகம் மற்றும் பெயர்ப்பலகை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது. 
கடற்கரைப்பள்ளி வீதியினை காபெட் வீதியாக நிர்மாணிப்பதே பொருத்தம் என பெரும்பாலோரினது கருத்தாகும். அதற்கான நியாயமான காரணங்களையும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 
மேலும் கடற்கரைப்பள்ளி வீதியினை காபெட் வீதியாக நிர்மாணிப்பதற்கு கடந்த மாகாண சபை ஆட்சியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் முன்மொழிவினை செய்தாகவும் அதற்கான அனுமதியினை மாகாண வீதி அமைச்சு வழங்கியதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறிருக்கையில் இவ்வீதி திடீரென கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்டு நேற்று அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

அம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு


அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் இதுவரை 3920 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
தற்போது 76 மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு இடம்பெறுவதாக சபையின் தலைவர் K.P.ஜயசிங்க கூறினார்.
பொலனறுவை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இம்முறை அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு நெல் கொள்வனவு இடம்பெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிட்டது.
அம்பாறை மாவட்டத்தில் 560 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 27

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு!

IMG_1216கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வும் பொதுக் கூட்டமும் இன்று (27.02.2013) மாலை நடைபெற்றது.
இவ்வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடற்கரை பள்ளி வீதியின் பிரதான வீதிச் சந்தியிலும் பொதுக் கூட்டம் அல்-பஹ்றியா மகா வித்தியாலய மண்டபத்திலும் நடைபெற்றது.
கடற்கரைப்பள்ளி வீதியானது 39 மில்லியன் ரூபா செலவில் இருமருங்கிலும் வடிகான் அமைத்து கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத் திட்டத்தினை இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எ.பறகத்துள்ளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 26

கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் செயலகம்



கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் செயலகம் பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் திறந்துவைக்கப்பட்டு இரண்டு வாரங்களாக இப்பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றிவருகின்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் இன்று (26.02.2013) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அதிதிகளாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மக்களுக்கு பிரயோசனமில்லாததால் அனைத்து கூட்டங்களையும் பகிஷ்கரிக்கிராராம் ஹரீஸ்



திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் உட்பட கட்சியின் அனைத்து கூட்டங்களையும் மக்களின் நலன் கருதி பகிஷ்கரித்து வருகின்றாராம் .

கல்முனைத் தொகுதிக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் எந்த ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சியின் தலைமையோ , உயர்பீடமோ உறிய பங்களிப்பை வழங்காமல் பிரயோசனமற்ற கூட்டங்களை நடத்துவதால் ஹரீஸ் அதிருப்தியடைந்துள்ளாராம்.

கல்முனை பிரதேச பாடசாலையில் ஆசிரியைகள் ஹிஜாப் அணிய அனுமதி

கல்முனை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்து செல்வது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் குறித்த பாடசாலையின் நிருவாகம் மற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்தே இந்த சர்ச்சைக்கு முடிவு கட்‌டப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் ஆசிரியைகள் தமது கலாசார உடையான ஹிஜாபினை அணிந்து சென்று கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதமுனையில் கார் கொள்ளை: புணானையில் சம்பவம்



தனது தொழில் தேவையின் நிமித்தம் பொலன்னறுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த காத்தான்குடி பூநொச்சிமுனையில் வசிக்கும் எச்.எம். ஹசன்தீன் என்பவர் செலுத்திச் சென்ற வாகனம் (கார்) இன்று காலை ஐந்து மணியளவில் புணானை பகுதியில் வைத்து ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

ஹசன்தீன் என்பவர் தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் விற்பனை மேற்பார்வையாளராகப் பணிபுரிபவராவார். அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதே ஆயுத குழுவொன்று குறித்த நபலை மிரட்டி காரை அபகரித்து சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஓட்டமாவடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்க நடவடிக்கை


கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாவட்ட ரீதியில் 450 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு இந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற 10,000 பட்டதாரிகளின் விண்ணப்பங்களிலிருந்து 6,800 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Saturday, February 23

பொத்துவில் மண்மலையில் உருவாகப்போகும் ”பன்சல” (புகைப்பட இணைப்பு) - இனவாதத்தின் இன்னுமொரு கட்டம்


 

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொத்துவில் கிராமத்தின் கிழக்குப் புறமாக கடற்கரையை அண்மித்த பிரதேசம்தான் சின்னப் புதுக்குடியிருப்பு றஹ்மத் நகர், மதுரஞ்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளாகும்.
இப்பகுதிகளில் ஏறத்தாழ 1500 தனியான முஸ்லிம் குடும்பங்கள் ஒற்றுமையாக வசித்து வருகின்றன. இப்பிரதேசத்தில் வேறு எந்த மாற்று இனத்தவர் ஒருவரும் வசித்திருக்கவில்லை. இப்பிரதேச எல்லைக்குள் புதைபொருள் ஆய்வு நிலையமும் சிங்கள சகோதரர்கள் எவரும் சூழவர இல்லாமல் முகுதுமகாவிகாரை எனும் பெயருடன் ஒரு பௌத்த மதகுரு மாத்திரமே உள்ளார்.