Thursday, January 31

அம்பாரை மாவட்டத்தில் மகா போக விவசாய அறுவடை ஆரம்பமாகியுள்ளது.


இம்மாவட்டத்திலுள்ள சுமார் 164,500 ஏக்கர் காணிகளில் இம்முறை சுமார் 140,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

சீரற்ற கால நிலையில் நெற்பயிர்கள் சேதத்துக்குள்ளான போதும் தற்போதைய நிலவரப்படி ஏக்கர் ஒன்றின் அறுவடையாக 75 புசல் தொடக்கம் 110 புசல் வரை கிடைக்கின்றது.

ஒரே பிரதேசத்திற்கு இரு அமைச்சுப் பதவிகள் :மக்கள் மத்தியில் சந்தேகம்- பைஸல் காசிம்






அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் ஆணிவேராக இருக்கின்றது. இந்த நிலையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் போது தொடர்ந்தும் இம்மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக தோன்றுகிறது. இது தொடர்பில் நாளை இடம்பெறும் கட்சியின் அதியுயர் பீடகூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவிருப்பதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ;-
புதிய அமைச்சரவையை ஜனாதிபதியே நியமித்துள்ளார். இதன்போது கட்சித் தலைவர் நாட்டில் இருக்கவில்லை. கட்சி கூடி ஆராய்ந்த பின்னர் அமைச்சுப் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன அது தவறான செய்தியாகும். அமைச்சுப் பதவி தொடர்பில் கட்சி எந்தவொரு கூட்டங்களையும் நடத்தவில்லை என்றார்.
இதேவேளை ஒரே பிரதேசத்திற்கு எமது கட்சிசார்பில் இரு அமைச்சுப் பதவிகளை வழங்கியிருக்கின்றமை மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவை தொடர்ந்து நாளையதினம் கூடவிருக்கும் கட்சியின் உயர்பீட கூட்டத்தின் போது தலைமையிடம் கேள்வி எழுப்ப இருப்பதாக பைஸல் காசிம் எம்.பி மேலும் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மற்றும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பெறுபேறுகள்


mlck copyக.பொ.த உயர் தரப் பரீட்சை 2012 இற்கான  பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது. கடந்த வருடம் உயிரியல் , பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளில் முறையே மாவட்ட மட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட கல்முனை ஸாஹிறாக் கல்லூரியும் மஹ்மூத் மகளிர் கல்லூரியும் இம்முறை அவ்விடங்களைப் பறிகொடுத்துள்ளதுடன் தங்களது பெறுபேறுகளிலும் வீழ்ச்சியைக் காட்டியுள்ளன. இம்முறை கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலும் மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் உயிரியல் , பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளுக்கு தெரிவாகியுள்ள மாணவர்கள் விபரம்.
மருத்துவ பீடம் :
ஸாஹிறாக் கல்லூரி கல்முனை
1. எம்.பி.எம். சில்மி – 19
மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை 
1. எம்.எப். ஹகீமா – 7
2. எப். ஷாபிறா – 13
3. எம்.எல்.எப். ஷிப்றா – 14
4. எம்.என். றஸ்கா ஆஸ்மி – 15
5. ஏ.ஜி.எப். இஹ்ஸானியா – 18
6. எப். அஸ்மா – 22
பொறியியல் பீடம் :
ஸாஹிறாக் கல்லூரி கல்முனை
1. எம்.எம். அர்ஸான் – 3
2. எம்.ஆர்.எம். இல்ஹாம் – 12
3. எம்.எம். ஆஸிம் – 17
4. எம்.ஆர்.எம். றெளசின் அஸார் – 22
மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை
1. ஏ.எஸ்.எப். நுஸ்லா – 2

தேசிய முஸ்லிம் கலாசார கண்காட்சி தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

??????????????????????????????? காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படவுள்ள தேசியமட்ட இலங்கை முஸ்லிம்களின் தொன்மை, வரலாறு, வாழ்வியல், உள்ளிட்ட கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் கிழக்கின் முதலாவது கலாசாரக் கண்காட்சி ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள இவ்வேளையில் இதை திறன்பட நடாத்தி முடிப்பது தொடர்பாகவும் ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் ஆராயும் விஷேட கலந்துரையாடல் இன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில் தலைமையில் காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய நூலக மண்டபத்தில் நடைபெற்றது.

Wednesday, January 30

3 தசாப்தங்களுக்கு மேல் மூடப்பட்ட கல்முனையின் வீதி திறக்கப்படுகிறது


கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக கல்முனை மாநகரில் மூடப்பட்டிருந்த வீதியொன்றினை மீண்டும் திறந்து பொது  மக்களின் பாவனைக்கு விடும் செயற்பாடொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பாரிய இயந்திரங்களின் உதவியுடன் பாதையினை திறப்பதற்கான ஆரம்ப கட்ட நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை பொலிஸ் வீதிக்கும் , பிரதான வீதிக்கும் இடையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலிருந்த வீதியொன்றினையே தற்போது திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
கல்முனை மாநகரசபையும் , இலங்கை
பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சியினால் அதிகளவிலான பொதுமக்களும் வர்த்தகர்களும் பயனடையவுள்ளனர்.

அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேறு; இல்லையேல் கட்சியில் இருந்து வெளியேற்றுவோம்; பஷீருக்கு ஆப்படிக்க திட்டம்!



Presentation1ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீடக் கூட்டம் அவசரமாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கூட­வுள்ள நிலையில், கட்சி­யின் அனுமதியின்றி அமைச்சுப் பதவியைப் பெற்ற கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதை அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்க முஸ்தீபு செய்யப்பட்டு- அதற்­கான வியூகங்கள் இரகசிய­மான முறையில் முடுக்கிவிடப்­பட்­டுள்ளன எனத் தெரிய வரு­கின்­றது.
இது தொடர்பில் கட்சியின் மிக முக்கியமான சிலர் நேற்று ­முன்தினம் கூடி ஆராய்ந்துள்­ள­னர் என அறிய முடிகின்றது.

“ஹலால் விழிப்புணர்வு நிகழ்வு" சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசலில்



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிந்த “ஹலால் விழிப்புணர்வு நிகழ்வு" (இலங்கையில் ஹலாலான உணவுப் பொருட்களையும் ஏனைய பாவனைப் பொருட்களையும் தெரிவு செய்வதில் அகில ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்)  இன்று சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.


சாய்ந்தமருது ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷேக் என்.எம்.முஜீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஹலால் சான்றிதழ் பிரச்சார குழு உறுப்பினர்களான

மௌலவி அஷ்ஷேக் எம்.ஏ.அர்ஸாத், மௌலவி எம்.இர்பான் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் எம்.ஏ.ஸி.எம்.சர்ஜுன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.



மக்கள் நலன்புரி தேவைக்கென காணி வழங்குமாறு வர்த்தகர் சங்கம் வேண்டுகோள்


சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்தகர் சங்கத்தால் மக்கள் நலன்புரி தேவைக்கென சாய்ந்தமருது கரைவாகு வட்டையில் வொலிவேரியன் வீட்டுத்திட்ட கிராமத்தில் 40 பேர்ச் காணியை வழங்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமிடம் மகஜர்
ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எச்.நஸீர் , செயலாளர் றிஸ்தி சரீப் மற்றும் கணக்காய்வாளர் எம்.எப்.அப்துல் பாஸித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது



தனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கல்முனையில் பொலில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனையின் போதே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பெட்டியில்; கஞ்சா வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த கான்ஸ்டபிளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று செவ்வாய்கிழமை காலையில்  கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர் 

Monday, January 28

அமைச்சரவை மாற்றத்தில் ரவூப் ஹக்கீமின் கோரிக்கை நிராகரிப்பு!


Hakeem (1)அமைச்சரவை மாற்றத்தின் போது தான் வகித்து வருகின்ற நீதி அமைச்சுக்குப் பதிலாக வேறொரு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அவர் உள்ளடக்காப்படவில்லை.
அதேவேளை பஷீர் சேகுதாவூதை அமைச்சரவை அமைச்சராக நியமிப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கருத்துக் கோரப்பட்ட போது அதனை அவர் வன்மையாக ஆட்சேபித்திருந்தார்.

சம்மாந்துறையில் ஆட்டோ சாரதி கழுத்து வெட்டிக் கொலை!


Murderசம்மாந்துறை மல்லிகைத்தீவு வீதியல் மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவரின் கைவிரல்கள்களை வெட்டி மோதிரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி, என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மல்வத்தை 2ம் பிரிவு புதுநகரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி பிரேமநாதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் கலாசார கண்காட்சி


from: Kattankudi.info

Poster2இலங்கை முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பாதுகாத்து பேணும் நோக்கில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதிஅமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களால் காத்தான்குடியில் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 2013 பெப்ரவரி மாதம் 1ம் 2ம் 3ம் திகதிகளில் கலாசாரக் கண்காட்சி ஒன்று பிரதேசசெயல ககலாசார பிரிவினால் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியில் வரலாற்றுப்பழைமைவாய்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டுபாவனைப்பொருட்கள்,  நாணயங்கள்,  கல்வெட்டுக்கள், பாரம்பரியவிவசாயம், மீன்பிடிகைத்தொழில்கள், மருத்துவம், சடங்குகள், தொடர்பாடல் முதலியகருவிகள் , உபகரணங்கள், வாழ்வியலை புலப்படுத்தும் அம்சங்கள் என்பன இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் இக்கண்காட்சியினை கண்டுகளிக்க வருமாறு அனைவரையும் காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பிரிவினர் அன்புடன் அழைக்கின்றனர்
Poster2
A