Thursday, January 31

ஒரே பிரதேசத்திற்கு இரு அமைச்சுப் பதவிகள் :மக்கள் மத்தியில் சந்தேகம்- பைஸல் காசிம்






அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் ஆணிவேராக இருக்கின்றது. இந்த நிலையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் போது தொடர்ந்தும் இம்மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக தோன்றுகிறது. இது தொடர்பில் நாளை இடம்பெறும் கட்சியின் அதியுயர் பீடகூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவிருப்பதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ;-
புதிய அமைச்சரவையை ஜனாதிபதியே நியமித்துள்ளார். இதன்போது கட்சித் தலைவர் நாட்டில் இருக்கவில்லை. கட்சி கூடி ஆராய்ந்த பின்னர் அமைச்சுப் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன அது தவறான செய்தியாகும். அமைச்சுப் பதவி தொடர்பில் கட்சி எந்தவொரு கூட்டங்களையும் நடத்தவில்லை என்றார்.
இதேவேளை ஒரே பிரதேசத்திற்கு எமது கட்சிசார்பில் இரு அமைச்சுப் பதவிகளை வழங்கியிருக்கின்றமை மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவை தொடர்ந்து நாளையதினம் கூடவிருக்கும் கட்சியின் உயர்பீட கூட்டத்தின் போது தலைமையிடம் கேள்வி எழுப்ப இருப்பதாக பைஸல் காசிம் எம்.பி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment