Tuesday, February 26

கிழக்கு மாகாண பாடசாலைகளில் புதிய ஆசிரியர்களை இணைக்க நடவடிக்கை


கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாவட்ட ரீதியில் 450 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு இந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற 10,000 பட்டதாரிகளின் விண்ணப்பங்களிலிருந்து 6,800 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment