Tuesday, February 26

ஆயுதமுனையில் கார் கொள்ளை: புணானையில் சம்பவம்



தனது தொழில் தேவையின் நிமித்தம் பொலன்னறுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த காத்தான்குடி பூநொச்சிமுனையில் வசிக்கும் எச்.எம். ஹசன்தீன் என்பவர் செலுத்திச் சென்ற வாகனம் (கார்) இன்று காலை ஐந்து மணியளவில் புணானை பகுதியில் வைத்து ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

ஹசன்தீன் என்பவர் தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் விற்பனை மேற்பார்வையாளராகப் பணிபுரிபவராவார். அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதே ஆயுத குழுவொன்று குறித்த நபலை மிரட்டி காரை அபகரித்து சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஓட்டமாவடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment