Tuesday, February 26

கல்முனை பிரதேச பாடசாலையில் ஆசிரியைகள் ஹிஜாப் அணிய அனுமதி

கல்முனை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்து செல்வது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் குறித்த பாடசாலையின் நிருவாகம் மற்றும் முஸ்லிம் ஆசிரியைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்தே இந்த சர்ச்சைக்கு முடிவு கட்‌டப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை முஸ்லிம் ஆசிரியைகள் தமது கலாசார உடையான ஹிஜாபினை அணிந்து சென்று கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment