Sunday, June 30

கல்முனை சாஹிறா கல்லூரியில் வெற்றிகரமாக இடம்பெற்ற ZESDO அமைப்பின் இரத்ததான நிகழ்வு


 செஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் இன்று (30-06-2013) நடைபெற்றது. ZESDO அமைப்பின் உறுப்பினர்களான அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணி புரியும் MCMC. ரிழா (Nurse), SHM. ஜர்மின் (MLT) ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தனர்.
செஸ்டோ அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.எம்.எஸ். வெலிகடராச்சி, என்.எம்.மெடகொடகெட்டி மற்றும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எஸ்.எச்.ஹனீம் ஆகியோரின்  வழி காட்டலில் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் செஸ்டோ அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment