Sunday, June 30

நாம் அரசை நம்பியிருக்கவில்லை சொந்த நிதியிலேயே இயங்குகிறோம் : கல்முனை மேயர்


அரச நிதி எமக்கு முற்றாக கிடைப்பதில்லை என்று கூறமுடியாது ஆனாலும் அதை நம்பி எமது மாநகர சபை இயங்கவில்லை, எமது வருமானத்தை வைத்தே நாம் எமது நகரத் தேவைகளை நிறைவேற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளார் கல்முனை மேயர் ஷிராஸ் மீராசாஹிப்.
நாம் கட்சித் தலைமைக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்கள், எல்லா பிரச்சனைகளையும் கட்சித்தலைமை தீர்க்க வேண்டிய அவசியமும் இல்லை என கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் கூறிய அவர், எமக்கிருக்கும் நெருக்குதல்களையும், பழிவாங்கல்களையும் மீறி நகரசபைக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே நாம் சிறப்பாக இயங்குகிறோம் எனத் தெரிவித்தார்.
13ம் திருத்தச்சட்டத்தினை நிராகரிப்பது எமக்கிருக்கும் உரிமைகளை பறித்தெடுப்பது என்றும் சுட்டிக்காட்டிய அவர் முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் தேவைகள் அறிந்து இயங்கும் கட்சி எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வாராந்த முஸ்லிம்குரல் ஒலிபரப்பின் மக்கள் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment