Wednesday, June 26

கல்முனை பிரதேச வர்த்தக பிரமுகர்களுக்கு வரி தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு


 
 
 
 
 
 
 
 
 உள்நாட்டு இறைவரி திணைக்கள  தகவல் கிளை கல்முனை வர்த்தகர் சம்மேளனத்தின் அனுசரணையில் ஒழுங்கு செய்திருந்த கல்முனை பிரதேச வர்த்தக பிரமுகர்களுக்கு வருமான வரி , நாட்டை கட்டியெழுப்புதல் வரி மற்றும் பெறுமதிசேர் வரி சம்பந்தமாக தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று இன்று மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ரெஸ்டோரன்டில் இடம்பெற்றது.

உள்நாட்டு இறைவரி திணைக்கள தகவல் பிரிவு பிரதி ஆணையாளர் ஜீ.எல்.ஜீ.விமலரெட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்

உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸம்மில் , வரிமதிப்பீட்டாளர் எம்.வை.எம்.நயீம் ஆகியோர் வரி தொடர்பான விளக்கங்களை வர்த்தக பிரமுகர்களுக்கு வழங்கினார்கள்.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அதிகளவிலான வர்த்தக பிரமுகர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment