Tuesday, June 25

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் மாணவர்தின நிகழ்வு (படங்கள்)


கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் க.பொ.த உ.த- 2013 மாணவர்தின நிகழ்வு இன்று (25) பாடசாலையின் எம்.எஸ். காரியப்பர் கூட்ட மண்டபத்தில்  வர்த்தககலைப்பிரிவு பகுதித்தலைவர் மௌலவி யு.எல்.எஸ். ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.
ஜெமீல் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். ஹாஸீம் மற்றும் பாடசாலை அதிபர் ஏ. ஆதம்பாவா, பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் மலர் வெளியீடு இடம்பெற்றதோடு, நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment