Tuesday, June 25

புனித நோன்பு காரணமாக ஒலுவில் துறைமுக திறப்புவிழா ஓகஸ்ட் மாதத்துக்கு மாற்றம் - பைசால் காசிம்

 
 
 
 
 
 
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்களை திறக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இத்துறை முகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.


இருந்தும் எதிர்வரும் ஜூலை  மாதம் புனித நோன்பு ஆரம்பமாகின்ற படியால் இதன் திறப்புவிழாவை ஓகஸ்ட் மாதத்துக்கு மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினரால் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி இத்திறப்புவிழா நிகழ்வை ஓகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment