Thursday, June 27

சாய்ந்தமருதில் "பல்லின சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு" கலந்துரையாடல்


"பல்லின சமூகத்தில் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு"  என்ற தலைப்பில் சிறப்புரையும் கலந்துரையாடலும் எதிர்வரும்  29-06-2013 சனிக்கிழமை "சமூக  ஆய்விற்கான நிலையம் சாய்ந்தமருது " இனால் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் அஷ் ஷேய்க் எம். ஏ.எம். மன்சூர் (நழீமி) (பணிப்பாளர், மிஷ்காத், இஸ்லாமிய ஆய்வு நிறுவனம்) சிறப்புரை ஆற்ற உள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் சமகால நிலைமைகளையும், சவால்களையும் கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலில் எமது பிரதேசத்தின் பல் துறை சார் நிபுணத்துவம் கொண்டவர்களும் புத்தி ஜீவிகளும் பங்கேற்கவுள்ளனர். எனவே இதில் அனைவரையும் பங்கேற்குமாறு "சமூக  ஆய்விற்கான நிலையம், சாய்ந்தமருது " வேண்டிக்கொள்கிறது. 



இடம்:பரடைஸ் வரவேற்பு மண்டபம், சாய்ந்தமருது

காலம்: 29-06-2013 (சனிக்கிழமை) பி.ப. 4.00 மணிக்கு

சிறப்புரை: அஷ் ஷேய்க் எம். ஏ.எம். மன்சூர் (நழீமி) (பணிப்பாளர், மிஷ்காத்,      இஸ்லாமிய ஆய்வு நிறுவனம்)

ஏற்பாடு: சமூக  ஆய்விற்கான நிலையம், சாய்ந்தமருது



No comments:

Post a Comment