Thursday, June 27

கல்முனை சாஹிறாவில் ZESDO அமைப்பினால் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு



















எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30-06-2013) கல்முனை சாஹிறா கல்லூரியில் Zahirians' Education and Social Development Organization (ZESDO) அமைப்பினால் மாபெரும் பொது இரத்த தான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை இடம்பெறும்.

இந்த இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய விரும்புவோர், Mr. S.H.M. Jarmin ( 0713217194, 0772995986) , Mr. M.C.M.C. Rila (0779944171) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறும் முப்பதாம் திகதி காலை கல்முனை சாஹிறா கல்லூரிக்கு சமூகமளிக்குமாறும் வேண்டப்படுகிறார்கள்.

அண்மைக்காலமாக ZESDO அமைப்பு கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் பல்வேறுபட்ட கல்வி, சமூகம், அபிவிருத்தி சார்ந்த விடையங்களில் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருவது குறிப்பிட தக்கது.


No comments:

Post a Comment