Friday, June 21

சாய்ந்தமருது காரியப்பர் வித்தியாலயத்திற்கு ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்டினார்





திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் ஒளிரும் கல்முனை “ திதுலன ” 51 வேலைத்திட்டத்தின் கீழ் 2வது வேலையைான சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா இன்று காலை (21) கல்லுாரி அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல். தவம், மற்றும் கல்முனை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் கட்சியின் அங்கத்துவத்திற்கான தேசிய  பணிப்பாளர் ஏ.சீ. யஹ்யாகான்,ஆகியோருடன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கட்சிப்போராளிகள், பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள்எனப்பலரும் கலந்துகொண்டனர். இன்று பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன், பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் தொடர்ந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment