Friday, June 28

சாய்ந்தமருது பிராந்திய சிவில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


(எம்.வை.அமீர்) 
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேகவர் பிரிவுகளில் இருந்து பிரிவுக்கு ஐவர் வீதம் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து விழிப்பூட்டும் நிகழ்வு ஒன்று 27-06-2013 மாலை 7 மணியளவில் சாய்ந்தமருது ‘ரியாளுள் ஜன்னா’ வித்தியாலத்தில் அந்தப்பாடசாலையின் அதிபர் தலைமயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய பிரதம போலீஸ் பொறுப்பதிகாரி AWA கfப்பாரும் விசேட அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ALA வாஹீத் மற்றும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் AA வசீர் மற்றும் உலமாக்களும் போலீசாரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய பிரதம போலீஸ் பொறுப்பதிகாரி,
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் சம்மந்தமாகவும் விரிவான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையாற்றும் போது சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் இணைப்பு பாலமாக திகழ வேண்டும் என்றும் கல்முனை போலீஸ் நிலைய எல்லைக்குள் இடம்பெறும் சில சீர் கேடுகளையும் இப்படியான சீர் கேடுகள் பிராந்திய மக்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் என்றும் இங்கு இடம்பெறும் தறுகளை திருத்திக் கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்கள் செறிந்து வாழும் இது போன்ற பிரதேசத்தில் இடம்பெறும் சீர் கேடுகள் மாற்றுச்சமுகத்தின் மத்தியில் மிகுந்து பேசப்படும் என்றும் உதாரணத்துக்கு தலைக்கவசம் இல்லாது வாகனம் செலுத்த சிலர் கோருவதாகவும் இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ள விடையத்தை தன்னிடம் அனுமதி கோரி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள தற்கொலைக்கு தன்னிடம் அனுமதி கோருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment