Tuesday, May 24

கல்முனையில் ஒரே சூலில் 3 பெண் குழந்தைகள் பெற்ற முஸ்லிம் தாய்


Posted: மே 24, 2011
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். 
சம்மாந்துறையைச் சேர்ந்த சஸ்னா எனும் பெண்ணுக்கே இம்மூன்று பெண் குழந்தைகள் கிடைத்துள்ளன.இம்மூன்று பெண் குழந்தைகளையும் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ஹில்மி சாலிஹ் தலைமையிலான வைத்தியர்கள் குழு அறுவைச் சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தனர்.
மூன்று பிள்ளைகளும் 950, 955, 960 கிராம் நிறைகளுடன் பிறந்துள்ளதாகவும் பிள்ளைகளும் தாயும் சுகதேகிகளாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.இவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப் பட்டு வருவதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் ரொஹான் சேனாரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment