Tuesday, May 31

கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சாண்றிதழ்கள் வழங்கும் வைபவம்...


by nesam on Tuesday, May 31, 2011

யூ.கே.காலித்தீன் - சாய்ந்தமருது செய்தியாளர்

நேற்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சீ.இ.எஸ் நிலையத்தில் பல்வேறு டிப்ளோமா மற்றும் சாண்றிதழ் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு  சாண்றிதழ்கள் வழங்கும் வைபவம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, கலந்து கொண்டு கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சாண்றிதழ்களை வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment