Friday, June 7

பொது பலசேனா தேவை, ஹலால் தேவையில்லை - கல்முனை சங்கரத்ன தேரர்


கல்முனை சுபத்திராராம விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்  வழங்கிய பிரத்தியேக பேட்டி இது.

 தேரரே முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உடை பற்றி உங்கள் கருத்து என்ன ? 
   சங்கரத்ன தேரர்:- இது ஒரு நல்ல விடயம். மற்றவர்கள் ரசிக்கக் கூடியவர்களாக பெண்கள் இருக்கக் கூடாது.பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.எமது நாட்டில் இப்படியான நிலைமை இருந்தபடியால்தான் பெண்கள் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சில கட்டுப்பாட்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது கட்டுப்பாடுகளை மீறி நடப்பதன் காரணமாக பல விதமான பிரச்சினைகள் தோன்றியிருப்பதை பத்திரிகைகள் ஊடாக வாசித்து அறிந்திருக்கிறோம். நாம் எம்மிடம் இருக்கின்ற பண்பாடு கலாசாரம் என்பவற்றை மதிக்காமல் வெளி நாடுகளிலுள்ள சில விடயங்களை எடுத்துப் பார்த்து அதற்காகவே நாம் முகம் கொடுக்கின்றோமே தவிர எமது கலாச்சாரங்களைப் பாதுகாப்பாக பேணவில்லை.இது ஒரு முக்கியமான காரணம். எமது நாட்டில் பெளத்தம் இஸ்லாம் இந்து கிறிஸ்தவம்  ஆகிய சமயங்களில் இருந்து கொண்டிருக்கின்ற நாம் அவ்வரவரின் சமயத்தை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம்தான் நூற்றுக்கு நூறு எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். $

Thursday, June 6

திட்டமிட்டபடி கல்முனையில் பொதுபல சேனா கூட்டம்: வன்முறைகள் வெடிக்கும் அபாயம்

bbsஎதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனையின் பொதுபல சேனாவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில், குறித்த தினத்தில் பொதுபல சேனாவின் கூட்டம் நடைபெறுமென்று பொதுபல சேனாவின் திட்டமிடல் அதிகாரி டாக்டர் டிலந்த விதானகே உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், கல்முனையில் சுபத்ராம விகாரை ஒன்று மாத்திரே உள்ளது. இதற்கு ஒரேயொரு பிக்கு மாத்திமே அங்கு கடமையாற்றுகிறார். சிங்கள குடும்பங்களே இல்லாத, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனையில் பொதுபல சேனா கூட்டத்தை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதன் பின்னணியில் சமூக மட்டத்தில் பலத்த சந்தேகங்களை எழுந்துள்ளன.
பொதுபல சேனாவுக்கு எதிராக கல்முனை மாநகரசபையில் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டித்து கல்முனை உள்ளிட்ட பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பாலமுனையில் புதிய கடற்படைமுகாம்

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்குட்பட்ட பாலமுனைக் கிராமத்தில் சின்னப்பாலமுனை எனும் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஜஸ்வாடி எனும் இடத்தில் கடந்த வாரத்தில் திடீரென அங்கு வருகை தந்த கடற்படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். ஒலுவில் துறைமுகமானது பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் அமையப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஒலுவில் துறைமுகத்திற்கு வடக்குப் புறமாக ஒரு கடற்படைமுகாமும், துறைமுகத்தின் உள்ளே ஒரு படைமுகாமும் இருக்க, தற்போது தென்புறத்திலுள்ள பாலமுனைக் கிராமத்திலும் திடீரென கடற்படை முகாம் ஒன்றை அமைத்துள்ளமை துறைமுகத்தின் பாதுகாப்புக் கருதியே எனக் கூறப்படுகின்றது. இருப்பினும், இது அப்பிரதேசத்தில் வாழும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இப் படைமுகாம் விஸ்தரிக்கப்படுமானால் அண்மையில் வாழுகின்ற மக்களுக்கு பெரும் தடையாக அமையும் எனவும், இங்குவாழும் முஸ்லீம்களின் தனித்துவம், கலாசாரம் பாதிக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

கல்முனை மாநகர சபையின் விசேட கூட்டத்தை 11 உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு!

KMC 10-01 (1)
கல்முனை மாநகர சபையில் அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 112 ஊழியர்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக இன்று முதல்வரினால் கூட்டப்பட்ட மாநகர சபையின் விசேட அவசர பொதுச் சபைக் கூட்டத்தை 11 உறுப்பினர்கள் பகிஷ்கரித்துள்ளனர்.
குறித்த அவசரக் கூட்டத்திற்கான அழைப்பு கடிதத்தில் குளறுபடிகள் காணப்படுவதாலும் போதிய கால அவகாசத்துடன் அக்கடிதம் உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படவில்லை என்பதாலுமே தாங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்ததாக மாநகர ஆளும் கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.
மாநகர சபையின் பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எம்.பரக்கத்துல்லாஹ், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், எம்.சாலிதீன், கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம், தமிழரசுக் கட்சி உறுப்பினர்களான வி.கமலநாதன், ஏ.விஜயரட்ணம், எஸ்.ஜெயகுமார் ஆகியோரே இன்றைய விசேட அவசரக் கூட்டத்தை பகிஷ்கரிப்பு செய்துள்ளனர்.
நண்பகல் 12 மணியளவில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இக்கூட்டத்தில் ஆளும் தரப்பில் மூவரும் எதிர்த் தரப்பில் மூன்று உறுப்பினர்களும் பிரசன்னமாகியுள்ளனர்.

சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக் கழகத்திற்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது சஹிரியன் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு தொகுதி கடின பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாநகர முதல்வர் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்றது.

மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி விளையாட்டு உபகரணங்கள் சஹிரியன் விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.எச்.ஜிப்றியிடம் முதல்வரினால் கையளிக்கப்பட்டது.

இதன்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.நிசார்டீன் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு முதல்வருக்கும் அமைச்சர்களுக்குமிடையே முரண்பாடுகள் இல்லை- மாகாண அமைச்சர்கள் தெரிவிப்பு

முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்குமிடையே எவ்வித கரு த்து மோதல்களோ பிரிவினையோ இல்லையென கிழக்கு மாகாண அமைச்சர்களான எம். எஸ். உதுமாலெப்பை மற்றும் விமலவீர திசாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர்.
மாகாண சபையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் கூட்டுப் பொறுப்புடனேயே செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். அம்பாறை உல்லாச விடுதியில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர்கள் இக்கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இங்கு அவர்கள் மேலும் கருத்துக் கூறுகையில்: கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நேர்மையானவர், எம்முடன் சுமுகமாக உறவு வைத்துள்ளார். நாங்களும் நம்பிக்கை மற்றும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருகிறோம். இந்நிலையில் சில ஊடகங்கள் எமக்கிடையே விரிசலை ஏற்படுத்த முற்படுவது தார்மீக பொறுப்பான செயல்.
ஜனாதிபதியில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளோம் என்றனர்.

Wednesday, June 5

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இன்று பல நிகழ்வுகள்


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இன்று வைபவமொன்று கல்லூரி சுற்றாடல் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோஸ்தர் திருமதி எஸ்.செல்வேற்குமரன் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
” அநாவசிய நுகர்வினை கைவிடுவோம்  என்பதற்கு அமைவாக  சிந்தி - உண் - சேமி  எனும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இன்றைய நிகழ்வில் பிரதான வளவாளர் மாணவர்களுக்கு சுற்றாடல்
தினத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றியதுடன்  கல்லூரி வளாகத்தினுள் மரம் நடும் நிகழ்வு மற்றும் திண்ம கழிவு முகாமைத்துவம் போன்றனவும் இடம்பெற்றன.

ஒன்பதாம் திகதி பொதுபல சேனாவின் கூட்டம் கல்முனையில் - எச்சரிக்கிறார் ஜெமீல்

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான பொது பல சேனா கல்முனையில் ஊடுருவ மேற்கொள்ளும்  முயற்சியானது முஸ்லிம்களை சீண்டி கலவரத்திற்கு வழியேற்படுத்தும் சதித் திட்டமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.  இதனை அரசாங்கம் அனுமதிக்குமாயின் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கல்முனை மாநகர சபையில் இடை நிறுத்தப்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!


கல்முனை மாநகர சபையில்  அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 112 ஊழியர்களை இன்று 05 ஆம் திகதி புதன்கிழமை கையொப்பம் இட்டு கடமை செய்ய வேண்டாம் என மாநகர சபை அதிகாரிகள் தடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களிடம் வினவியபோது;

Tuesday, June 4

சாய்ந்தமருது பிரதேச மக்களுக்காக கட்டப்படுகின்ற வீடுகளை பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வை


சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்டத்தில் பொருளாதார அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்காக கட்டப்படுகின்ற வீடுகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று மாலை பார்வையிட்டார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பெயரில் வருகை தந்த பிரதி அமைச்சர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு அதனை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்தார்.

மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை  உறுப்பினரும் பொறியியலாளருமான சிப்லி பாறுக், சவுதி நாட்டு மன்னரின் ஆலோசகர்களில் ஒருவரான அஷ்ஷேக் எகியா பின்  ரசிதி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 


உலக வீதிப் பாதுகாப்பு தினத்தையொட்டி கல்முனை ஸாஹிராவில் இன்று கருத்தரங்கு


கல்முனை வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஒழுக்காற்று சபையின் ஒத்துழைப்போடு ஒழுங்கு செய்திருந்த ” பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் ” எனும் தொனிப்பொருளிலான மாணவர்களுக்கு விழிப்புட்டும் கருத்தரங்கொன்று இன்று கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஜபீர் இடமாற்றம்- ஊழியர்களும் மக்களும் மகிழ்ச்சி


கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக இருந்து அவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தவரும் தமிழ் மக்களுக்கு கொடுமைகளையும் அநீதிகளையும் செய்து வந்தவரான ஜாபீர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
ஜபீரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் அப்பிரதேச பொதுமக்களும் நீண்டகாலமாக ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தனர்.   கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் தமிழ் பெண்கள் மீதும் வைத்தியசாலையில் பணிபுரியும் தமிழ் பெண் ஊழியர்கள் மீதும் பாலியல் தொந்தரவுகளை ஜபீர் செய்து வந்தார் என அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்திலும் மரண விசாரணைகளில் இராணுவத்தினருக்கு சார்பாகவே அறிக்கைகளை சமர்ப்பித்து வந்தார்.
மட்டக்களப்பு நகரில் வெசாக் தினத்தின் போது நடந்த குண்டு வெடிப்பை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த மரணங்கள் குண்டுவெடிப்பினால் நிகழ்ந்ததாக அப்போது ஜபீர் அறிக்கை கொடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிராவுக்கு 30 முதலிடங்கள்


கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கல்முனை ஸாஹிராக்கல்லூரி 30 முதலிடங்கயும் 8 இரண்டாம் இடங்களையும் 7 மூன்றாம் இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த வியாளக்கிழமை ( 30) நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இறுதி தின விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுணர் ரியர் அட்மிரல் மொஹான் வியஜவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கான கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

சாய்ந்தமருது 'பீச் பார்க்' - தடைகளை தகர்க்க ரவூப் ஹக்கீமின் உதவியை நாடும் மேயர்


    கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபின் முயற்சியின் பயனாக சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் சுமார் 15 மில்லியன் ரூபா செலவில் கிழக்கின் முன் மாதிரியான  “பீச் பார்க்”  ஒன்று அழகான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
    இதன் முதல் கட்டம் 60 இலட்சம் ரூபா செலவில் தற்பொழுது முடிவடைந்திருப்பதாகவும் இரண்டாம் கட்ட வேலைகள் 90 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
    இவ்வாறு அழகான முறையில் அமைக்கப்பட்டு வரும் இப் பீச் பார்க் வேலைத் திட்டத்தை ஒரு சிலர் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகவும் அது அவர்களின் பகல் கனவாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மேயர் சிராஸ் மீராசாகிப் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களிடம்  இப் பீச் பார்க் அமைப்பதற்குள்ள தடைகளை நிவர்த்தி செய்து துரிதமாக இவ் வேலைத் திட்டத்தை முடிப்பதற்கு வழி வகுத்துத் தரல் வேண்டும் என்றதொரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

கார் விபத்துக்குள்ளானதில் சாய்ந்தமருது பெண்மணி மரணம்

accidentஅம்பாறை கொனாகொல்ல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தபோதே குறித்த கார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொனாகொல்ல நெடுஞ்சாலையில் பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக சாய்ந்தமருது 5ஆம் பிரிவு பிரதான வீதியைச் சேர்ந்த ஜெமீலா அநூன் காரியப்பர் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கல்முனை பட்டின சபையின் முதலாவது தவிசாளராக பதவி வகித்த மர்ஹூம் இஸ்மாயில் காரியப்பரின் மூத்த புதல்வியும் மர்ஹூம் ஜெமீல் காரியப்பரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு இவர் மாமி முறையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது ஜனாஸா தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவரது மருமகன் எஸ்.எம் அஜ்வத் தெரிவித்தார்.
அதேவேளை அவருடன் பயணித்து காயமடைந்த மகள் உட்பட மூன்று உறவினர்களும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் எஸ்.எம் அஜ்வத் குறிப்பிட்டார்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)