Sunday, June 26

அம்பாறையில் காரைதீவு மற்றும் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்கள் பூட்டு

அம்பாறையில் விசேட அதிரடிப்படை முகாம்கள் பூட்டு
அம்பாறை மாவட்டத்தில் நாளைய தினம் இரண்டு விசேட அதிரடிப்படை முகாம்கள் மூடப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் அமைந்துள்ள காரைதீவு பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமும் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுமே இவ்வாறு மூடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு மூடபபடும் இந்த விசேட அதிரடிப்படையினர் வவுனியாவுக்கும், மல்வத்தைக்கும் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காரைதீவு பகுதியில் தனியார் கட்டடம் மற்றும் அரச கட்டடம் என்பவற்றை உள்ளடக்கி இயங்கி வந்த விசேட அதிரடிப்படை காரியாலயம் நாளைய தினம் மூடப்படும் அதேவேளை தனியாரின் உடைமை கையளிக்கப்படவுள்ளதாகவும் அரச கட்டடத்தில் இராணவத்தின் தங்க வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
அத்துடன் இப்பகுதியை அண்டி மூடப்பட்டிருந்த வீதியும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment