Wednesday, June 29

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கடந்த பலவருடங்களாக ஆசிரியர்களாக பணியாற்றி மாணவர்களின் கல்வி வளர்சியில் பெரும் பங்காற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை




கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கடந்த பலவருடங்களாக ஆசிரியர்களாக பணியாற்றி மாணவர்களின் கல்வி வளர்சியில் பெரும் பங்காற்றி  ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவமொன்று கல்லூரியன் எம்.எஸ்.காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

34 வருடங்கள் விஞ்ஞான பாட ஆசிரியராக கடமையாற்றிய எஸ்.சுலைமாலெவ்வை மற்றும்  25 வருடங்களுக்கு மேலாக சமூகக்கல்வி மற்றும் வரலாறு பாடங்களை கற்பித்த எம்.எம்.ஜமால்தீன் ஆகியோருக்கே இப்பிரியாவிடை வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற பிரியாவிடை வைபவத்தில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பிரியாவிடை பெற்றுச் செல்லும் இரு ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டன





No comments:

Post a Comment