Wednesday, July 13

கல்முனை மாநகர ஆயுர்வேத வைத்தியசாலை கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில்


கல்முனை மாநகர ஆயுர்வேத வைத்தியசாலை கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர்  செனட்டர் இஸட்.எம்.மசூர்மௌலானாவின் அழைப்பின் பேரில்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ்வைத்தியசாலைத் திறந்து வைத்தார்.


கல்முனை மாநகர சபை உறுப்பினர் பி.ரி.ஜமால் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எம்.எஸ்.இப்றாலெப்பை, கல்முனை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எம்.ஹபீபுல்இலாஹி, கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.ஏ.எம்.நியாஸ் உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment