Saturday, July 23

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி! தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில்




இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட  பதில் பீடாதிபதியும் விளையாட்டு ஆலோசனை பேரவையின் பணிப்பாளருமான கலாநிதி ஏ. ஜௌபரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மற்றும் உடற்கல்வித்துறை பொறுப்பாளர் எம்.எல்.ஏ. தாஹிரின் ஏற்பாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் , பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பிரசன்யமாகி இருந்தார்கள்.


இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ , வயம்ப, பேராதனை ,கொழும்பு, களணி , சப்ரகமுவ , யாழ்ப்பாணம், ரஜரட்ட ,மொரட்டுவ,ஸ்ரீ ஜயவர்த்தன புர மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீர வீராங்கனைகள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.








No comments:

Post a Comment