Tuesday, July 19

மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்

மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்


July 18, 2011  11:38 am
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படடுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா தெரிவித்தார்.

கடந்த செம்பர் மாதம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களினால் உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் அவை விசாரணை நடாத்தப்படாமல் மூடி மறைக்கப்பட்டதாகவும் இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விரிவுரையாளர் சம்மந்தப்பட்ட சிறுவர்களள வீட்டிற்கு அழைத்து தமது கையடக்கத் தொலைபேசி மூலமும், கணினி மூலமும் ஆபாசபடங்களை காண்பித்ததுடன் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் 14, மற்றும் 8 வயதை உடையவர்கள் எனவும் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்று வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது.

இது தொடர்பான முழு அளவிலான விசாரணைகள் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.என்.மென்டிஸ்சின் நேரடி மேற்பார்வையில் கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் சம்மந்தப்பட்ட விரிவுரையாளரை சனிக்கிழமை (16.7.2011) திகதி கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment