Tuesday, January 31

இவ்வருடத்தில் கிழக்கில் பல மாதிரிக் கிராமங்கள் : கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை


கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பின் தங்கிய கிராமங்களை துரிதகதியில் அபிவிருத்தி செய்து அக்கிராம மக்களின் அடிப்படை வசதிகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் 9 புதிய மாதிரிக்கிராமங்களை அமைக்க கிழக்கு மாகாணசபை திட்டமிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தில் ஹிரா கிராமம், பாலமுனை, சாகாமம், ஆலையடிவேம்பு மற்றும் அம்பாறை நவகம்புரவும், திருகோணமலை மாவட்டத்தில் மகாதிவுல்வெவ, ஸாபி நகர், வேதத்தீவு, மூதுர் நிலாக் கேனி கிராமங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலாந்தீவு, உருகாமம், பணிச்சங்கேனி ஆகிய கிராமங்களும் இவ்வருடம் முடிவடைவதற்குல் முன் மாதிரி கிராமங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி , வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தெறிவித்தார்

No comments:

Post a Comment