Friday, April 13

சவளக்கடை கைரியா பள்ளிவாசலுக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலினால் நீர் விநியோக பவுசர் அன்பளிப்பு!

3அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் சவளக்கடை அல்-மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான நீர் விநியோக பவுசர் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காஸிம், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் குறித்த நீர் விநியோக பவுசரைக் கையளித்தனர்.

வரட்சியான காலப் பகுதியில் மக்களுக்கு குடி நீரை விநியோகிப்பதற்காக இந்த பவுசர் பயன்படுத்தப்படவுள்ளது. மிக நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

1
2
3

Share this post

No comments:

Post a Comment