Wednesday, April 25

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி ராஜினாமா!


1231

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் அப்துல் மஜீத் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரான அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.


அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “நான் தங்களது கட்சியில் இணைந்து சுமார் இரண்டு வருடங்களாகி விட்டன. இக்கால பகுதிக்குள் என்னால் முடிந்தளவு கட்சியை ஊடகமயப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் பணியாற்றக்கிடைத்தது மகிழ்ச்சியான விடயம்.
ஆனாலும் நாடு இன்றிருக்கும் சூழலில் தனிப்பட்ட நலன்களுக்கப்பால் முஸ்லிம் சமூகத்துக்கான உரிமைக் குரலாக நான் இயங்குவதே இறைவனுக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வகையில் நான் உலமா கட்சியை மீண்டும் அரசியலில் முன்னெடுத்துச் செல்லவுள்ளேன்.
எனவே தங்களின் அ.இ.மக்கள் காங்கிரசிலிருந்து நான் ராஜினாமா செய்வதுடன் அக்கட்சியின் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேவேளை சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் தங்களுக்கும் தங்களது கட்சியின் முக்கியஸ்தர்களான சகோதரர் அமீர் அலி, சகோதரர் ஹிஸ்புள்ளா, சகோதரர் சுபைர் ஆகியோர்களுக்குமான எனது தனிப்பட்ட ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதுடன் இந்த ராஜினாமா தனிப்பட்ட வகையில் நமக்கிருக்கும் பற்றுறுதியில் எத்தகைய விரிசலையும் ஏற்படுத்தாது என்பது எனது நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment