Saturday, May 5

ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எம்.சீ.ஆதம்பாவா சட்டத்தரணி பரீட்சையில் சித்தி

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு வாழ்த்து

பிரபல கல்விமானும் சமூகசேவையாளருமான ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எம்.சீ.ஆதம்பாவா, சட்டத்தரணி பரீட்சையில் சித்தி பெற்றமையை சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு பாராட்டி வாழ்த்துத் தெரிவிததுள்ளது.

கல்வித்துறையிலும் சமூகசேவையிலும் இனநல்லுறவிலும் மிகுந்த அர்ப்பணிப்புடனும்,தியாகத்துடனும், நேர்மையுடனும் செயற்பட்டுவரும் அல்ஹாஜ் எம்.சீ.ஆதம்பாவா அவர்களின் விடாமுயற்ச்சிக்குக் கிடைத்த வெற்றி எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு ஓரு முன் உதாரணமாக
விளங்கும் என சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment