Wednesday, June 27

கல்முனை வலய பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் ஒழுக்கம் சம்மந்தமான விசேட கலந்துரையாடல்


கல்முனை  மனித உரிமைகள் ஆனைக்குழுவும் மனித அபிவிருத்தி தாபனமும் இணைநது கல்முனை வலய பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் ஒழுக்கம் சம்மந்தமான விசேட கலந்துரையாடல் கூட்டத்தினை  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ரீ.. தௌபீக் அவர்களின் தலைமையில் நடாத்தியது. இதற்கு ஆலோசகர்களாக மனித உரிமைகள் ஆனைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் .. சறுக் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ். ஜாபிர் ஆகியோருடன் மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் பீ. ஸ்ரீகாந்தா மற்றும் உதவி இணைப்பாளர் எம்..றியால் ஆகியோர் கலந்து கொணடனர். இதற்கு கல்முனை வலய பாடசாலை ஒழுக்காற்று குழு, அதிபர் ஆசிரியர் உட்பட 32 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment