Thursday, June 28

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பி. போட்டியிடும்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடத் தீர்மானித்துள்ளது மக்கள் விடுதலை முன்னணியானது எந்தக்கட்சியுடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடமாட்டாதெனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடுவோமெனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதெனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment