Thursday, June 28

”கிராமத்திற்கு ஒரு வீடு ” திட்டத்தின் அடிப்படையில் சாய்ந்தமருதில் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் நடும் வைபவம்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும்கிராமத்திற்கு ஒரு வீடுதிட்டத்தின் அடிப்படையில் சாய்ந்தமருதில் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் நடும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் , சாய்ந்தமருது ஜும் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா , அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி
எஸ்.எம்..லத்தீப் , உலமா சபையின் தலைவர் என்.எம்.முஜீப் , சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் .சி.நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் .ஜி.அன்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment