Thursday, July 5

சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் சிரமதான நிகழ்வு


75765ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் யுனொப்ஸ் நிறுவனம் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து சாய்ந்தமருது திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவும் இல்ஷாம் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் இடம்பெற்றது.
இதில் கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமாகிய அப்துல் பஷிர் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர்,சாய்ந்தமருது சகாதார வைத்திய அதிகாரி சகியா இஸ்ஸடீன், அதிபர் எம்.நசார் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜவ்பர், இல்ஹாம் இளைஞர் கழகத்தலைவர் ஏ.எம். நவ்பான் சாய்ந்தமருது சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment