Saturday, July 7

கல்முனை மாநகர சபை – யுனெப்ஸ் ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்



666கல்முனை மாநகர சபையானது யுனப்ஸ் நிறுவனத்துடன் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டிற்கான ஒப்பந்தம் ஒன்றை யுனப்ஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நேற்று கைச்சாத்திட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே. லியாகத் அலி,  யுனப்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட செயற்திட்ட முகாமையாளர் வி.சீலியா மாகர்ஸ், யுனப்ஸ் நிறுவனத்தின் திண்மக்கழிவு முகமைத்துவ பிரிவின் நிபுணர் சி.சிவா, யுனப்ஸ் நிறுவனத்தின் திண்மக்கழிவு முகமைத்துவ பிரிவின் செயற்பாட்டு முகாமையாளர் குருபரன், முதல்வரின் செயளாலர் இன்சாட் மற்றும் மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு பொறுப்பாளர் என்.எம்.அக்றம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment