Tuesday, March 26

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி - காட்சிக்கூடத்தை திறந்தார் அமைச்சர் அதாஉல்லா


அம்பாரையில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினதும் அதன் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தினதும் காட்சிக் கூடங்களை தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருக்கும் ஆவணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். 
இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தின் காட்சிக் கூடத்தில் உள்ளுராட்சி சபைகளின் நிதி, நிர்வாகம் மற்றும் சட்டப்புத்தகங்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் காட்சிக்கூடத்தில் அமைச்சினால் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திட்டங்கள் சம்பந்தமான விடயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்நிகழ்வின்போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஐ.ஏ. ஹமீட் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் செயற்திட்டங்களின் செயற்திட்டப்பணிப்பாளர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வின்போது கலந்து சிறப்பித்தனர்.  

No comments:

Post a Comment