Wednesday, May 1

கல்முனைப் பிரதேசத்தில் அதிக மீன்கள்.



மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு கல்முனைப்பிரதேசத்தில் கரைவலை மீனவர்களால் அதிகளவு மீன் நேற்று மாலை பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்தமாதம் இப்பிரதேசத்தில் நிலவிய கடல் கொந்தழிப்பு காரணமாக கரைவலை மீனவர்களால் மீன் பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் தொழிலின்றி மிகவும் கஷ்ட்டத்தை அனுபவிக்க வேண்டிருந்தது.


கல்முனைப்பிரதேசத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக

கடல் மீன்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியிருந்ததோடு சந்தைகளில் மீன்களுக்கு பெரும் கிராக்கியும் ஏற்பட்டிருந்தது.


வலைக்குள் அதிக மீன்களைக் கண்ட மீனவர்கள் மிகவும் மகிழ்சி அடைந்ததுடன் சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன்கள் மிக மலிவான விலையில் விற்கப்பட்டன..




No comments:

Post a Comment