Wednesday, May 22

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய பூங்காவினை சேதப்படுத்தி மின்குமிழ்களும் திருட்டு


கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பூங்கா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை வளாகத்திலிருந்த மின் குமிழ்களும் திருடப்பட்டுள்ளன. 

பாடசாலையின் மதில்கள் மீதேறிவந்து இந்த திருட்டுச் சம்பவத்தில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று பாடசாலை அதிபர் ஏ.எல்.அப்துல் றஸாகினால் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கும் தெரியப்படுத்தியதாக அதிபர் கூறினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment