Monday, June 24

அரசியல்வாதிகள் அபிவிருத்தித்திட்டங்கள் என்று கூறி கற்களை நடுகிறார்கள் பின்னர் அந்த இடத்தில் கல்வைத்த தடயமே இல்லாமல் போய்விடுறது- ஆரிப் சம்சுடீன்



மாணவர்கள் தூய எண்ணத்துடன் செயற்படும்போதுதான் அவர்களிடையே சிறந்த ஆளுமை உருவாகும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.

இன்று (24) காலை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கணினி நிலையத்திற்கான அடிகல் நடும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது,
நவீன யுகத்தின் சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்பட வேண்டும்.  கணினி உபயோகத்தின் தேவை இன்று நம்மிடையே பிண்ணிப்பிணைந்ததாக மாறிவிட்டது. கணினி அறிவின் அவசியம் எல்லோராலும் உணரப்பட்டுள்ள நிலையில், நமது பிரதேச மாணவர்களும் அதன் பயனை  அடையக் கூடியவர்களாக மாற வேண்டும். இப்பாடசாலை மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் நோக்குடன் இன்று இக்கணினி நிலையத்துக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.
எல்லா அரசியல் வாதிகளும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் என்று கூறி கற்களை நடுகிறார்கள். பின்னர் அந்த இடத்தில் கல்வைத்த தடயமே இல்லாமல் போய்விடுறது. இந்தக் கலாசார்தை நான்  செய்ய விரும்பவில்லை.
மக்களை ஏமாற்றும் நோக்கமும் எனக்கில்லை. நூறு அடிக்கற்களை வைப்பதை விட ஒரு கல்லை வைத்துவிட்டு அந்த இடத்தில் உரிய வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதுதான் எனது ஆசை. அந்தவகையில் இப்பாடசாலைக்கு இந்தக் கணினி நிலையத்தை கொண்டு வருவற்கான நிதியைப் பெற்றமையானது புதையல் தோண்டி எடுத்த ஒரு அனுபவமே என்னுள் பேசிக்கொண்டிக்கிறது,
அத்தகையதொரு பிரயத்தனத்தின் மத்தியில் இப்பாடசாலையில் ஒரு கணினி நிலையம் உருவாக வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்த கணினி நிலையத்துக்கான பணிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்யபடும் என நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பாடசாலை மாணர்களின் பரீட்சை அடைவு மட்டங்கள் இப்பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளின் மாணவர் தேர்ச்சியுடன் ஒப்பிடும்போது குறைந்த நிலையிலுள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையிலிருந்து முன்னெற்றகரமானதொரு நிலை இப்பாடசாலையில் உருவாக வேண்டும். அதற்கு இப்பாடசாலை அதிபர் முதல் அசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன ஒன்றினைந்து செயற்படுவீர்கன் என்று நம்புகின்றேன் என்று கூறிய அவர் இப்பாடசாடலையின் கல்வி  விருத்தியில் எனது அக்கறைதொடர்ந்தும் இருந்து வருமென்றார்.
இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசிம். கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல்,  மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள  பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment