Saturday, June 29

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் புதிய பயிலுனர் அனுமதி


aa
2013-2015 கல்வியாண்டுக்கான புதிய பயிலுனர் அனுமதி எதிர் வரும் 03.07.2013 ந் திகதி புதன் கிழமை காலை 09.00 மணிக்கு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெறுமென பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் படி 190 பயிலுனர்கள் பின்வரும் 07 கற்கை நெறிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
1. விஞ்ஞானம் – 30
2. கணிதம் – 30
3. வர்த்தகமும்கணக்கியலும்- 20
4. ஆரம்ப நெறி – 50
5. இஸ்லாம் – 15
6. தமிழ் – 30
7. விசேட கல்வி -15
மேற்படி பயிலுனர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் தபாலில் இடப்பட்டுள்ளன. கடிதம் கிடைத்தவர்கள் மாத்திரம் ஜுலை 03 ம் திகதி கல்லூரிக்கு உரிய ஆவணங்களுடன் வருகை தந்து அன்றைய தினம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பீடாதிபதி வேண்டிக்கொள்கின்றார்.

புதிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment