Monday, July 1

நாவலடியில் அந்நூர் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது.


10(1)(1)
மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
 .
பள்ளிவாசலில் நேற்று இரவு இஷாத் தொழுகை முடிந்து பள்ளிவாயலை இரவு 09 மணியளவில் மூடிவிட்டு சென்ற பின், இன்று காலை  பள்ளிவாயலில் கடமை செய்பவர் சுபஹ் தொழுகைக்காக காலை 04 மணியளவில் பள்ளிவாயலுக்கு வந்த போது பள்ளிவாயல் உடைந்து காணப்பட்டதாக இப் பள்ளிவாயலில் கடமை புரியும் மௌலவி எச்.எம்.இர்பான் தெரிவித்துள்ளார்.
 .
பள்ளி வாயலில் உள்ளுக்கு இருக்கும் உண்டியலும், வெளியில் இருக்கும் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அலுமாரி உடைக்கப்பட்டு அதனுல் இருந்த பொருட்களை வெளியே எறியப்பட்டுள்ளது.
.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10(1)(1)
Msj 01

No comments:

Post a Comment