தேசத்திற்கு மகுடம் அங்குரார்ப்பண நிகழ்வுகளுக்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலாவது நிகழ்வுக்காக ஏறாவூர் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகைக்கான ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

