Wednesday, March 20

ஜனாதிபதியை வரவேற்க ஏறாவூர் நகரம் தயாராகிறது !





தேசத்திற்கு மகுடம் அங்குரார்ப்பண நிகழ்வுகளுக்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலாவது நிகழ்வுக்காக  ஏறாவூர் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.


ஜனாதிபதியின் வருகைக்கான ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

Tuesday, March 19

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மட்டக்களப்பிற்கு வருகை


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பிரதம நீதியரசராக கடமையேற்று முதன்முறையாக இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், முதலில் மட்டு. மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னைய்யா ஜோசப்பை சந்தித்து ஆசி பெற்றார். இந்த சந்திப்பு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிவபாதசுந்தரம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க தலைவர் வினோபா இந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி வினோபா இந்திரன் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது நீதிமன்ற கட்டிட வளாகத்தில் பிரதம நீதியரசருக்கான பொலிஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் கலந்துகொண்டார். சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற பதிவாளர்கள் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபைக்கு கெப் வழங்கினார் அமைச்சர் அதாவுல்லா




கல்முனை மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்எம். அதாஉல்லா அவர்கள்  கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம் ஒன்றினை வழங்குவதனையும் அதனை கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்கள் பெற்றுக் கொள்வதையும் படத்தில் காணலாம்.