Wednesday, June 1

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு



(றிப்தி அலி)
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்  இடைநிறுத்தி வைக்கப்பட்டமையை கண்டித்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தபோது, மேற்படி இரு மாணவர்களும் கூக்குரலிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே 3 மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இடைநிறுத்தப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் பல்கலைக்கழக உப வேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவாத்தை வெற்றியளிக்காத பட்டசத்தில் வகுப்பு பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment