Thursday, June 2

பெற்றோரை இழந்த வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவு காசோலைகள்


on Thursday, June 2, 2011

)

கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெற்றோரை இழந்த வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவு
காசோலைகள் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் வைத்து அப்பிள்ளைகளின் பாதுகாவலர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் என்.ஜி.அப்துல் கமால் ஆகியோர்கள் காசோலைகளை வழங்கி வைத்தனர்.


No comments:

Post a Comment