Tuesday, July 5

சம்மாந்துறை பாடசாலையில் நீர் நஞ்சானது

சம்மாந்துறை பாடசாலையில் நீர் நஞ்சானது



சம்மாந்துறை ஷாருசலாம் மகாவித்தியாலயத்தில் நீர் நஞ்சானதில் சுமார் 150 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது மாணவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் சுமார் 75 மாணவர்கள் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதோடு ஏனைய 75 மாணவர்களுக்கு சேலைன் ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments:

Post a Comment