Saturday, October 22

கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆசிரியர் ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்காக நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.






 மட்டக்களப்பில் அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளைய தினம்  இந்தப் போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தவிர்க்க முடியதாத காரணங்களினால் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை இந்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்


இந்த பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment