Tuesday, October 25

"அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்" நூல் வெளியீட்டு விழா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில்

images(சாய்ந்தமருது செய்தியாளர்)
பிரபல பன்னூலாசிரியரும் ஊடகவியலாளருமான சாய்ந்தமருது எம் எம் எம் நூறுல் ஹக் எழுதிய "அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்" எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை (2011.10.26) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மெட்ரோ மிரர் செய்தி இணையத்தள முகாமைத்துவ ஆசிரியர் செயிட் அஸ்லம் எஸ்.மௌலானா தொடக்கவுரையையும் கவிஞர் நவாஸ் சௌபி நூல் ஆய்வுரையையும் நிகழ்த்தவுள்ளனர். அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி நூலின் முதற் பிரதியைப் பெறுவார் என மருதம் கலை இலக்க்ய வட்டத்தின் தலைவர் ஏ.எம்.நஸீர் தெரிவித்தார்.

Share this post

No comments:

Post a Comment