Sunday, October 23

தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கு செங்யங் எரோஸ்பஸ் பல்கலைக்கழகத்தினால் கௌரவ பேராசிரியர் பட்டம்



Sunday, October 23, 2011
கடந்த வாரம் சீன நாட்டிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கு செங்யங் எரோஸ்பஸ் பல்கலைக்கழகத்தினால் கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இவ்விஜயத்தினை மேற் கொண்ட உப வேந்தர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மற்றும் பீடாதிபதிகளை சந்தித்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பௌதிக அபிவிருத்தி சம்மந்தமாகவும் கலந்துறையாடினார்.



இந்நிகழ்வின் போது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல்துறை விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம்.றியால் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment