Friday, November 18

கல்முனையில் ஜனாதிபதிக்காக துஆப் பிரார்த்தனை - ரொம்ப முக்கியம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை அல் - அஷ்ஹர் வித்தியாலயத்தில் கூட்டமும், ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனையும் இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.றஸாக் தலைமையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு பற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது ஜனாதிபதியின் சிறப்பம்சங்கள், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பணிகள் பற்றி பாடசாலையின் பிரதி அதிபர் எம்.மசூட், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் செயலாளர் தேசமான்ய யூ.எல்.எம்.பைஸர், இணைப்புச் செயலாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஆகியோர்கள் உரையாற்றினர்.



ஜனாதிபதியின் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்காகவும் நாட்டின் நல்லாட்சிக்குமாக வேண்டி துஆப் பிரார்த்தனையினை மௌலவி எம். சைபுதீனினால் நிகழ்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் செயலாளர் தேசமான்ய யூ.எல்.எம்.பைஸர், பிரத்தியேக செயலாளர் எம். தௌபீக் ஆகியோர்களினால் இனிப்புப் பண்டம் வழங்கப்பட்டது

கல்முனையில் ஜனாதிபதிக்காக துஆப் பிரார்த்தனை

 

No comments:

Post a Comment